மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டிக்கு பெரிய மனசு. அவர் ஏற்கனவே 100 இதய நோயாளிகளின் சிகிச்சைக்கான செலவை ஏற்றுக் கொண்டுள்ள நிலையில் தற்போது மேலும் 250 பேருக்கு உதவ முன்வந்துள்ளார். மாலிவுட்டில் பல ஆண்டுகளாக கொடுகெட்டிப் பறக்கும் நடிகர் மம்முட்டி. அவர் திருவனந்தபுரத்தில் உள்ள என்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையுடன் சேர்ந்து 100 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் மேலும் 250 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள முன்வந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருவனந்தபுரத்தில் உள்ள என்.ஐ.எம்.எஸ். மருத்துவமனையுடன் சேர்ந்து 100 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக் கொண்டேன். அவர்களுக்கு பைபாஸ் ஆபரேஷன் உள்பட அனைத்தும் இலவசமாக வழங்க ஏற்பாடு செய்தேன். இந்நிலையில் மேலும் 250 இதய நோயாளிகளின் மருத்துவ செலவை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துள்ளேன் என்றார். சமூக சேவையில் அதிக ஆர்வம் காட்டும் மம்முட்டி நாளை அந்த மருத்துவமனைக்கு செல்கிறார். அங்கு இலவசமாக இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுடன் நேரத்தை செலவிடுகிறார். இதய அறுவை சிகிச்சை தவிர மம்முட்டி தனது ரசிகர் மன்றத்தின் மூலம் ஏழை மக்களுக்கு இலவசமாக கண்புரை அகற்றும் சிகிச்சை செய்யவும் உதவி வருகிறார். இதயமுள்ளவர்!
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.