அஷ்டலட்சுமி கோயில் - Temples in chennai
அஷ்டலட்சுமிகளையும் தரிசனம் செய்ய சிறு சிறு வளைவு நெளிவுகளில் நுழைந்து வருவதே தெய்வீக அனுபவம்.
இக்கோயிலில் லட்சுமிதேவி எட்டு முகங்களாலும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு இடையில் வரும் நவராத்திரி 9 நாள் விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பானது. இந்தக் கோயிலுக்குத் எல்லாத் திசைகளிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.
இக்கோயிலில் லட்சுமிதேவி எட்டு முகங்களாலும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு இடையில் வரும் நவராத்திரி 9 நாள் விழா கொண்டாட்டம் மிகச் சிறப்பானது. இந்தக் கோயிலுக்குத் எல்லாத் திசைகளிலிருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் இருக்கிறார்கள்.அமைவிடம்: எலியட்ஸ் கடற்கரை. சென்னை - 600 090. நேரம் காலை 6.30 மணி முதல் மதியம் 12 மணி வரை. மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை. தொலைபேசி - 24911763.
ஐயப்பன் கோயில் (மகாலிங்கபுரம்) - Temples in chennai
ஐயப்பனை தரிசிக்க கேரளத்திற்குச் செல்லாமல் சென்னையிலும் தரிசித்துக் கொள்ளலாம். அதற்கொரு வாய்ப்பு இக்கோயில் சென்னையில் முதன்முதலாக அமைக்கப்பட்ட ஐயப்பன் கோயில்.அமைவிடம்: 18, மாதவன் நாயர் தெரு, மகாலிங்கபுரம், நுங்கம்பாக்கம், சென்னை - 34. நேரம்: காலை 4 மணி முதல் 11 மணி வரை. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை. தொலைபேசி - 28171197.
காளி - பாரிகோயில் - Temples in chennai
காளி வீடு இது. காளி பாரி என்ற வங்காளச் சொல்லின் பொருள் காளி வீடு என்பதுதான். கொல்கத்தாவில்
உள்ள தக் ஷனேஸ்வரர் காளி கோயிலின் சாயலில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு அமைதியான தியான மண்டபம் உள்ளது. அவ்வப்போது பஜனைகளும் ஆன்மிக சொற்பொழிவுகளும் நிகழும். நவராத்திரி துர்க்கை பூசை மற்றும் காளி பூசை தினங்கள் வெகு சிறப்பானவை.
உள்ள தக் ஷனேஸ்வரர் காளி கோயிலின் சாயலில் இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இங்கு அமைதியான தியான மண்டபம் உள்ளது. அவ்வப்போது பஜனைகளும் ஆன்மிக சொற்பொழிவுகளும் நிகழும். நவராத்திரி துர்க்கை பூசை மற்றும் காளி பூசை தினங்கள் வெகு சிறப்பானவை.அமைவிடம்: 32, உமாபதி தெரு, சென்னை - 600 033. நேரம்: காலை 6-12 மணி மாலை 4-9 மணி வரை தொலைபேசி - 24837170.
ஐயப்பன் கோயில் (இராஜா அண்ணாமலைபுரம்) - Temples in chennai
இது இரண்டாவது ஐயப்பன் கோயில். சபரி மலையில் கோயில் கொண்ட கடவுள் இங்கும் எழுந்தருளியுள்ளார். மூலக் கோயில் போலவே இங்கும் 18 படிகள் உள்ளன. சிறப்புப் பூஜைகள் அக்டோபர் மற்றும் ஜனவரி மாதங்களில் நடைபெறும்.
அமைவிடம்: இராஜா அண்ணாமலைபுரம், சென்னை - 28. நேரம்: காலை 6-11 மணி வரை மாலை 5.30-9 மணி வரை. தொலைபேசி - 26490013.
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்க மையம் - Temples in chennai
ஹரே ராமா ஹரே கிருஷ்ணா பக்தி இயக்கம் உலகம் முழுதும் பலரை ஹரே ராமா சொல்ல வைத்திருக்கிறது. சுவாமி பக்தி வேதாந்த பிரபு பாதா என்பவரால் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம். இங்கு வழிபாடு முடிந்த கையோடு வயிற்றுக்கும் ஈயப்படும்.
அமைவிடம்: 32 பர்கிட் சாலை, தி.நகர், சென்னை - 600 017. நேரம்: காலை 4.30-1.00 மணி வரை மாலை 4-8 மணி வரை.
கபாலீஸ்வரர் கோயில் - Temples in chennai
அகண்ட திருக்குளம், எதிரே ஆதிசிவன் எழுந்தருளியுள்ள திருக்கோயில். நான்கு மாட வீதிகள். திருஞானசம்பந்தர்
பதிகம் பாடிய திருத்தலம். அன்னை பார்வதி மயில் உருவில் வந்து எம்பெருமானை வழிபட்டதால் இந்தப் புனிதத் தலம் திருமயிலை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பத்து நாட்கள் நடக்கும் திருவிழா. மிகவும் முக்கியமானது. பத்தாம் நாள் நடக்கும் அறுபத்து மூவர் திருவிழா இக்கோயிலின் தனிச் சிறப்பு.
பதிகம் பாடிய திருத்தலம். அன்னை பார்வதி மயில் உருவில் வந்து எம்பெருமானை வழிபட்டதால் இந்தப் புனிதத் தலம் திருமயிலை என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் பத்து நாட்கள் நடக்கும் திருவிழா. மிகவும் முக்கியமானது. பத்தாம் நாள் நடக்கும் அறுபத்து மூவர் திருவிழா இக்கோயிலின் தனிச் சிறப்பு.அமைவிடம் - மயிலாப்பூர், சென்னை - 600 004. நேரம் காலை 6-1 மணி வரை மாலை 4-8 மணி வரை. தொலைபேசி - 24641670.
காளிகாம்பாள் கோயில் - Temples in chennai
வர்த்தக நெரிசல் மிகுந்த பாரிமுனையில் தெய்வீக வெளிச்சம் தரும் ஆலயம். இங்கு நிகழும் வழிபாடு புதுமையின் வடிவம் பக்தர்களை அமைதியாக அமரவைத்து அபிஷேகம் செய்து முடிந்ததும் தேங்காய் பழங்களை வழங்கிச் சிறப்பிக்கிறார்கள். இங்கு கோயில் கொண்டுள்ளாள் பராசக்தியின் மற்றொரு திருவுருவான உக்கிர சொரூப காளி. இன்னொரு சுவாரஸ்யமான செய்தி மராட்டிய வீரன் சத்ரபதி சிவாஜி 3.10.1677 அன்று இக்கோயிலில் வழிபட்டதாக இங்குள்ள கல்வெட்டு கூறுகிறது.
அமைவிடம்: 212, தம்பு செட்டி தெரு, சென்னை - 600 001. நேரம்: காலை 6.30-12 மணி வரை மாலை 5-9 மணி வரை. தொலைபேசி - 25229624.
பாம்பன் சுவாமிகள் கோயில் - Temples in chennai
சித்தர்களைத் தேடி மலைக்காடுகளுக்குச் செல்ல வேண்டியதில்லை. இங்கேயும் ஒரு சித்தர் முக்தியடைந்துள்ளார்.
இராமேஸ்வரம் அருகே பாம்பனில் 1850 ஆம் ஆண்டு அவதரித்த பாம்பன் சுவாமிகள் 1922இல் முக்தியடைந்தார். மயூரபுரத்தில் அவரது சமாதி மற்றும் கோயிலாக இது விளங்குகிறது.
இராமேஸ்வரம் அருகே பாம்பனில் 1850 ஆம் ஆண்டு அவதரித்த பாம்பன் சுவாமிகள் 1922இல் முக்தியடைந்தார். மயூரபுரத்தில் அவரது சமாதி மற்றும் கோயிலாக இது விளங்குகிறது. அமைவிடம் - மயூரபுரம், திருவான்மியூர், சென்னை - 41. நேரம் காலை 6-1 மாலை 3-8 மணி வரை. தொலைபேசி - 24521866.
மத்திய கைலாஷ் - Temples in chennai
அடையாறில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்களின் சாலை முகத்துவாரத்தில் அமைந்திருக்கிறது மத்திய கைலாஷ். வெண்பளிங்குக் கற்களில் உருவாக்கப்பட்ட அமைதி தவழும் ஆன்மிக அடையாளம் இது. வலப்புறத்தின் நடுவில் விநாயகப் பெருமான் வீற்றிருக்கிறார். தந்தை பரமேஸ்வரன், அம்மை உமையவள், ஆதித்யன் மற்றும் திருமால் ஆகியோர் எழுந்தருளியுள்ளார்கள். இங்கு அனுமனுக்கும் பைரவனுக்கும் சன்னதிகள் தனியே உள்ளன. மரங்களின் பசுமையில் பக்தி தழைக்கிறது.
அமைவிடம்: சர்தார் பட்டேல் சாலை, அடையாறு, சென்னை - 600 020. நேரம்: காலை 5.30-12 மாலை 4-8 மணி வரை. தொலைபேசி - 22350859.
மருந்தீஸ்வரர் திருக்கோயில் - Temples in chennai
மருந்தே சிவம்; சிவமே மருந்து. இத்திருத்தலத்தில் உள்ள முக்கண்ணனை வழிபட்டால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை. இங்கு மூலிகைத் தோட்டம் ஒன்றும் உள்ளது. 11 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இக்கோயில் நமது கலாச்சாரம் கட்டடக்கலை ஆகியவற்றின் சாட்சியாக நிற்கிறது. இத்திருத்தலத்திற்குக் இராம காவியம் படைத்த வால்மீகி வந்ததாக கர்ண பரம்பரை செய்தி உண்டு. அதன் காரணமாக இப்பகுதி திருவான்மியூர் என்றழைக்கப்படுகிறது.
அமைவிடம்: திருவான்மியூர், சென்னை - 600 041. நேரம்: காலை 6-1 மாலை 4-8.30 மணி வரை. தொலைபேசி 24410477.
பார்த்தசாரதி சுவாமி கோயில் - Temples in chennai
மெரினா கடற்கரைக்கு மிக அருகில் ஒரு வைணவ திருத்தலம். புராதனம் படிந்த கோயில் வளாகம். எழில் நிறை
சிற்பங்களின் காட்சிக்கூடமாக அருள்தரும். உயர்ந்த கோபுரங்களும் பரந்து விரிந்த பிரகாரங்களும் பக்த மனங்களுக்கு ஆறுதல் தரும் அம்சங்கள். இக்கோயில் தென் திருப்பதி என்று அழைக்கப்படுவதால் இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்து தினசரி தரிசிக்கிறார்கள். குருசேத்திரப் போரில் பார்த்தனுக்குத் தேரோட்டினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். இந்தக் கோலத்தில் அவர் பகன்ற போர்க்கள வேதமான கீதை. இந்தியாவின் உலகப் பங்களிப்பு. பகவானின் இத்திருக்கோலத்தில் இக்கோயிலின் மூர்த்தி எழுந்தருளியுள்ளார். திருவருள் பெற திருவல்லிக்கேணிக்குச் செல்லுங்கள்.
சிற்பங்களின் காட்சிக்கூடமாக அருள்தரும். உயர்ந்த கோபுரங்களும் பரந்து விரிந்த பிரகாரங்களும் பக்த மனங்களுக்கு ஆறுதல் தரும் அம்சங்கள். இக்கோயில் தென் திருப்பதி என்று அழைக்கப்படுவதால் இந்தியா முழுவதிலுமிருந்து பக்தர்கள் வந்து தினசரி தரிசிக்கிறார்கள். குருசேத்திரப் போரில் பார்த்தனுக்குத் தேரோட்டினார் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர். இந்தக் கோலத்தில் அவர் பகன்ற போர்க்கள வேதமான கீதை. இந்தியாவின் உலகப் பங்களிப்பு. பகவானின் இத்திருக்கோலத்தில் இக்கோயிலின் மூர்த்தி எழுந்தருளியுள்ளார். திருவருள் பெற திருவல்லிக்கேணிக்குச் செல்லுங்கள்.அமைவிடம்: திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. நேரம்: காலை 6.30-1 மாலை 3-8 மணி வரை. தொலைபேசி - 28442462.
வடபழனி ஆண்டவர் கோயில் - Temples in chennai
ஒரு நூற்றாண்டைக் கடந்த முருகன் கோயில். அழகில், அதன் பரிமாணத்தில் பெரும் புகழ்பெற்ற தெய்வீக ஆலயம். தூய்மையும், பக்தியும் தவழும் திருக்கோயிலான இது. பழனி மலை முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. இங்கு திருக்குளமும் உண்டு. வருடந்தோறும் நிகழும் தெப்பத் திருவிழா பிரபலம். வாரம் தவறாமல் சென்னை வாசிகள் சென்றுவரும் தலங்களில் வடபழனி ஆண்டவர் கோயிலும் ஒன்று.
அமைவிடம்: வடபழனி, சென்னை - 600 026. நேரம்: காலை 6-1 மாலை 3-8.30 மணி வரை. தொலைபேசி - 24836903.
சாய்பாபா கோயில் - Temples in chennai
ஸ்ரீ சாய்பாபா, சமத்துவம் பெற்றெடுத்த குழந்தை. அவர் ஓர் இந்துவாகப் பிறந்து, இஸ்லாமிய அன்பர் ஒருவரால் வளர்க்கப்பட்டவர்.
இறுதியில் சூஃபி மார்க்கத்தில் தனித்துவம் மிக்கவராக மலர்ந்தார். சித்து விளையாட்டுகளில் சிகரம் தொட்டவராகக் கருதப்படுகிறார். அனைத்திந்திய சாய்பாபா சமாஜம் என்று அழைக்கப்படும் இந்தக் கோயில் ஸ்ரீ சாய்பாபா நினைவாகக் கட்டப்பட்டது. ஞாயிறன்று நடைபெறும் அக்னி பூசை வழிபடத்தக்கது. இந்த ஆன்மிக குருவின் நினைவிடத்திற்குச் சென்று வழிபடுவதும் இறையருளின் அருட்கொடையே.
இறுதியில் சூஃபி மார்க்கத்தில் தனித்துவம் மிக்கவராக மலர்ந்தார். சித்து விளையாட்டுகளில் சிகரம் தொட்டவராகக் கருதப்படுகிறார். அனைத்திந்திய சாய்பாபா சமாஜம் என்று அழைக்கப்படும் இந்தக் கோயில் ஸ்ரீ சாய்பாபா நினைவாகக் கட்டப்பட்டது. ஞாயிறன்று நடைபெறும் அக்னி பூசை வழிபடத்தக்கது. இந்த ஆன்மிக குருவின் நினைவிடத்திற்குச் சென்று வழிபடுவதும் இறையருளின் அருட்கொடையே.அமைவிடம்: அனைத்து இந்தியா சாய் சமாஜம், 15, வெங்கடேச அக்ரஹார சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. நேரம்: காலை 5-12 மாலை 4-9 மணி வரை. தொலைபேசி - 24640784.
திருமலை - திருப்பதி தேவஸ்தானம், சென்னை - Temples in chennai
திருப்பதி ஏழுமலை வெங்கடேசப் பெருமாளை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்கான தகவல் மையம். இங்கு திருப்பதி குறித்த அனைத்துத் தகவல்களும் கிடைக்கும். ஏழுமலையானின் திருவுருவச் சிலை அமைக்கப்பட்டு தினசரி வழிபாடும் நடந்து வருகிறது. திருப்பதி கூட்டத்தை இங்கும் தினம் பார்க்கலாம். இங்குள்ள தகவல் மையம் சனி ஞாயிறு நாட்களிலும் இயங்கும். செவ்வாய் தேசிய விடுமுறை நாட்கள் மற்றும் மாதத்தின் இரண்டாவது திங்கட்கிழமைகள் விடுமுறை.
அமைவிடம்: 50, வெங்கட்நாராயணா சாலை, தி.நகர், சென்னை - 600 017. நேரம்: காலை 9-1 மாலை 4-8 மணி வரை. தொலைபேசி - 24343535.
ராமகிருஷ்ணா கோயில் - Temples in chennai
ஸ்ரீ ராமகிருஷ்ணா பரமஹம்சர் சமரச சன்மார்க்கத்தின் குறியீடு. அவரது நினைவைப் போற்றும் இந்த சர்வமதக்
கோயில் தென்னிந்திய கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டது. பேரமைதி ததும்பும் இத்திருக்கோயிலில் தியானம் தவறாமல் நிகழ்கிறது. இங்கே பகவான் ராமகிருஷ்ணர் 7 அடி உயரச் சிலையாக தாமரை மலரின் நடுவில் வீற்றிருக்கிறார். அனைத்து மதத்தினரும் இக்கோயிலுக்குச் சென்று வரலாம்.
கோயில் தென்னிந்திய கட்டடக் கலை பாணியில் கட்டப்பட்டது. பேரமைதி ததும்பும் இத்திருக்கோயிலில் தியானம் தவறாமல் நிகழ்கிறது. இங்கே பகவான் ராமகிருஷ்ணர் 7 அடி உயரச் சிலையாக தாமரை மலரின் நடுவில் வீற்றிருக்கிறார். அனைத்து மதத்தினரும் இக்கோயிலுக்குச் சென்று வரலாம்.அமைவிடம்: மயிலாப்பூர், சென்னை - 600 004. நேரம்: காலை 5-1.30 மாலை 3.30-8.30 மணி வரை. தொலைபேசி - 24941959.
ஸ்ரீநாராயண குரு - Temples in chennai
கேரள மண்ணில் ஒடுக்கப்பட்ட, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களின் நல்வாழ்விற்காகப் போராடிய பெரியார் நாராயண குரு. சமூக சீர்திருத்தவாதி. பொதுநலன் குறித்த அக்கறையில் வாழ்ந்த மகான். இந்தப் பெருந்தலைவரை சிறப்பிக்கும் நினைவாலயம் வேப்பேரி நாராயண குரு சாலையில் அமைந்துள்ளது.
திருவள்ளுவர் கோயில் - Temples in chennai
வான்புகழ் கொண்ட வள்ளுவரை இங்கு இறையருளின் வடிவமாகப் பார்க்கலாம். எக்காலத்திற்கும் பொருந்தும் உலகப் பொதுமறை திருக்குறள்.
திருவள்ளுவர் ஒரு புலவர் என்ற போதிலும் மக்களில் அவர் கடவுளாக வழிபடப்படுகிறார். நானூறு வருடங்களுக்கு முன்பு வள்ளுவப் பெருந்தகையின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவாலயம். அறிவுலகை வியக்க வைத்த மாமுனிவனின் ஞானத்திருக்கோயில். வள்ளுவம் படியுங்கள் வள்ளுவரை வணங்குங்கள்.
திருவள்ளுவர் ஒரு புலவர் என்ற போதிலும் மக்களில் அவர் கடவுளாக வழிபடப்படுகிறார். நானூறு வருடங்களுக்கு முன்பு வள்ளுவப் பெருந்தகையின் நினைவாகக் கட்டப்பட்ட நினைவாலயம். அறிவுலகை வியக்க வைத்த மாமுனிவனின் ஞானத்திருக்கோயில். வள்ளுவம் படியுங்கள் வள்ளுவரை வணங்குங்கள். அமைவிடம்: திருவள்ளுவர் கோயில், மயிலாப்பூர், சென்னை - 4.
ஆண்டர்சன் தேவாலயம் - Temples in chennai
ஐரோப்பிய பாணியிலான கூரிய தேவாலய கோபுரம் மேற்கத்திய கலை அழகியலின் வடிவம். ஆங்கிலேயர்கள் ஆண்ட சுவடுகள் கிறிஸ்தவ தேவாலயங்களில் மிச்சம் இருக்கின்றன. சென்னைக்கு வந்த ஸ்காட்லாந்து இறைப் பணியாளர்களில் ஒருவர் ஆண்டர்சன். கி.பி. 1835 இல் ஜான் ஆண்டர்சன் பொதுப்பள்ளியைத் தொடங்கினார்.
பிறகு இது மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் பள்ளி என்று பெயர் மாற்றம் பெற்று சென்னை ஜார்ஜ் டவுன் பகுதிக்கு மாற்றப்பட்டது. கல்வித் துறைக்கு அரும்பெரும் பணிகள் செய்த ஆண்டர்சனின் பெயரை இந்தத் தேவாலயம் நினைவூட்டி வருகிறது. இந்தத் தேவாலத்தின் அழகுமிகு கட்டடத்தில்தான் சென்னை கிறிஸ்தவ கல்லூரி முன்பு இருந்தது. இந்த கல்லிமானின் ஆன்மாவில் கொழுந்துவிட்ட கல்விச்சுடர் இன்னும் அணையாமல் எரிந்து வருகிறது.
பிறகு இது மெட்ராஸ் கிறிஸ்டியன் கல்லூரி மற்றும் பள்ளி என்று பெயர் மாற்றம் பெற்று சென்னை ஜார்ஜ் டவுன் பகுதிக்கு மாற்றப்பட்டது. கல்வித் துறைக்கு அரும்பெரும் பணிகள் செய்த ஆண்டர்சனின் பெயரை இந்தத் தேவாலயம் நினைவூட்டி வருகிறது. இந்தத் தேவாலத்தின் அழகுமிகு கட்டடத்தில்தான் சென்னை கிறிஸ்தவ கல்லூரி முன்பு இருந்தது. இந்த கல்லிமானின் ஆன்மாவில் கொழுந்துவிட்ட கல்விச்சுடர் இன்னும் அணையாமல் எரிந்து வருகிறது.ஆன்ட்ரூ தேவாலயம் - Temples in chennai
சென்னை எழும்பூர் ரயில்நிலையத்திலிருந்து பார்த்தால் விண்ணை முட்டும் தேவாலயத்தின் கூம்பு வடிவ கோபுரம் தெரியும். பழமையின் வேர்களில் இறுகப் பற்றி நிற்கும். இது ஆங்கிலேயர் காலத்தில் இந்தியாவின் மிகச் சிறந்த தேவாலயமாகக் கருதப்பட்டது. "ஜார்ஜிய கட்டடக் கலையின் மிகச் சிறந்த ஒன்றாக இந்தத் தேவாலயம் விளங்குகிறது" என்று எழுதியுள்ளார் பிரபல வரலாற்றாசிரியர் எஸ்.முத்தையா. சென்னையின் அதி உன்னத ஆலயம் என்று குறிப்பிடுகிறார்.
டபிள்யூ டி.மன்ரோ. இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயமான இதன் அசல் பெயரே (ஆண்ட்ரூஸ் கிரிக்) ஸ்காட்லாந்துடன் இருந்த தொடர்பை வெளிப்படுத்துகிறது. சென்னை ராஜதானிக்கு 1815 ஆம் ஆண்டு ஓரு ஸ்காட்லாந்துக்காரர் அமைச்சராகவே நியமிக்கப்பட்டுள்ளார். அப்போதைய கால கட்டத்தில் நிறைய ஸ்காட்லாந்துக்காரார்கள் சென்னையில் வாழ்ந்து வந்ததால் அவர்களுக்காக பிரத்யேகமாக இந்தத் தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது.
டபிள்யூ டி.மன்ரோ. இருநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயமான இதன் அசல் பெயரே (ஆண்ட்ரூஸ் கிரிக்) ஸ்காட்லாந்துடன் இருந்த தொடர்பை வெளிப்படுத்துகிறது. சென்னை ராஜதானிக்கு 1815 ஆம் ஆண்டு ஓரு ஸ்காட்லாந்துக்காரர் அமைச்சராகவே நியமிக்கப்பட்டுள்ளார். அப்போதைய கால கட்டத்தில் நிறைய ஸ்காட்லாந்துக்காரார்கள் சென்னையில் வாழ்ந்து வந்ததால் அவர்களுக்காக பிரத்யேகமாக இந்தத் தேவாலயம் கட்டப்பட்டிருக்கிறது.அமைவிடம்: பூந்தமல்லி நெடுஞ்சாலை, எழும்பூர் ரயில் நிலையம் பின்புறம், சென்னை - 600 008. தொலைபேசி - 28611236 - 25612608.
செவன்த்டே அட்வென்டிஸ்ட் தேவாலயம் - Temples in chennai
பலமுறை நம் கண்ணில் தட்டுப்படுகிற பெயர் இது. அதென்ன செவன்த்டே அட்வென்டிஸ்ட்? ஒர் அனைத்துலக கிறிஸ்தவ அமைப்பு. இதனுடைய இறைப்பணி என்பது சி.எஸ்.ஐ. மற்றும் ரோமன் கத்தோலிக்க திருச்சபைகளின் பணிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. இத்தேவாலயத்தில் சனிக்கிழமை தோறும் பிரார்த்தனை நடப்பதால் இது 7 ஆம் நாள் தேவாலயம் என்று அழைக்கப்படுகிறது.
அமைவிடம்: ரித்தர்டன் சாலை, வேப்பேரி, சென்னை - 7. தொலைபேசி - 26412618.
கிறிஸ்து தேவாலயம் - Temples in chennai
பழம்பெரும் வரலாற்றின் காலடித் தடங்களை அறிந்து மகிழ செல்ல வேண்டிய இடம் கிறிஸ்து தேவாலயம். ஏழை எளிய மக்கள் பிரார்த்தனை செய்வதற்காக 1842 இல் ரெவரண்ட் ஹென்றி டெய்லர் என்பவரால் தொடங்கப்பட்ட ஆலயம் இது. இறையருள்
என்பதோடு நின்றுவிடாமல கல்வியையும் அள்ளித் தந்தது. 1843 ஆம் ஆண்டு ஆர்ச் டெகான் ஹெர்பர் இந்த ஆலய வளாகத்திற்குள் இரண்டு கல்வி ஆலயங்களையும் திறந்தார். இந்தப் பள்ளிகள் அங்கீகாரம் பெற்று கிரைஸ்ட் சர்ச் பள்ளிகள் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டன.
என்பதோடு நின்றுவிடாமல கல்வியையும் அள்ளித் தந்தது. 1843 ஆம் ஆண்டு ஆர்ச் டெகான் ஹெர்பர் இந்த ஆலய வளாகத்திற்குள் இரண்டு கல்வி ஆலயங்களையும் திறந்தார். இந்தப் பள்ளிகள் அங்கீகாரம் பெற்று கிரைஸ்ட் சர்ச் பள்ளிகள் என்று பெயரிட்டு அழைக்கப்பட்டன.அமைவிடம்: அண்ணா சாலை, காஸ்மோபாலிடன் கிளப் அருகில், சென்னை -600 002. தொலைபேசி - 28549780.
சாந்தோம் கதீட்ரல் தேவாலயம் - Temples in chennai
மணல் மேவிய சாந்தோம் கடற்கரைக்கு அருகில் வெண்புறா கூட்டத்தைப்போல பார்வையின் திசையெங்கும் அமைதியின் அழகை வீசிக்கொண்டிருக்கிறது கதீட்ரல் சர்ச் தேவாலயம் இறைப்பணிக்காகப் புனிதர் இயேசுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட சீடர்களில் புனித தாமஸ் என்ற தோமையரும் ஒருவர். இயேசுவின் அருளுரைகளை ஏந்திக் கொண்டு தோமையர் இந்தியா வந்தபோது இயேசு பெருமான் மறைந்து 52 ஆண்டுகள் ஆகிவிட்டிருந்தது. அவர் முதலில் காலடி எடுத்து வைத்தது கோவாவின் திரேங்கனூர் துறைமுகத்தில், அந்தப் பகுதியில் ஏழு இடங்களில் தேவாலயங்களை ஏற்படுத்தி மக்களை கிறிஸ்தவ மயப்படுத்தினார்.
தோமையார் கேரளத்தைவிட்டு தமிழகத்துக்கு வந்தது எங்கே? மயிலாப்பூர். இங்கு தனது தன்னலமற்ற இறைப்பணிகளைத் தொடர்ந்தார். அவரது பேச்சால், பணியால் வசீகரிக்கப்பட்டு பொதுமக்கள் கிறிஸ்தவத்திற்கு மாறினார்கள். இதைப்பார்த்து வெகுண்டெழுந்த மன்னன் ராஜாமகாதேவன் அவரைப் படுகொலை செய்ய ஆட்களை ஏவினான். சின்னமலை குகையில் தலைமறைவாக இருந்து வந்த தோமையர் இறுதியில் செயிண்ட் தாமஸ் மலையில் எதிரிகளால் கொலை செய்யப்பட்டார்.
இந்தப் புனிதரின் உடல் மயிலாப்பூர் கடற்கரையில் கி.பி. 72 ஆம் ஆண்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. காலமாற்றங்களில் இந்தத் தேவாலயம் பெருகி வளர்ந்து தியாகத்தின் சின்னமாக பெரும் புகழுடன் உயர்ந்து நிற்கிறது. உலகளவில் இயேசுவின் சீடர்கள் இருவருக்கு மட்டும்தான் நல்லடக்கம் செய்யப்பட்ட இடங்களில் தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஒன்று ரோம் நகரில் உள்ள புனித பேதுரு தேவாலயம். இரண்டாவது புனித தோமையருக்கான சாந்தோம் தேவாலயம். நீங்கள் வணங்கப்போகும் ஆலயத்தின் வரலாறையும் தெரிந்து கொள்வது நல்லதுதானே! இந்த கதீட்ரல் தேவாலயம் தேசிய புனிதத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புனிதரின் உடல் மயிலாப்பூர் கடற்கரையில் கி.பி. 72 ஆம் ஆண்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. காலமாற்றங்களில் இந்தத் தேவாலயம் பெருகி வளர்ந்து தியாகத்தின் சின்னமாக பெரும் புகழுடன் உயர்ந்து நிற்கிறது. உலகளவில் இயேசுவின் சீடர்கள் இருவருக்கு மட்டும்தான் நல்லடக்கம் செய்யப்பட்ட இடங்களில் தேவாலயங்கள் எழுப்பப்பட்டுள்ளன. ஒன்று ரோம் நகரில் உள்ள புனித பேதுரு தேவாலயம். இரண்டாவது புனித தோமையருக்கான சாந்தோம் தேவாலயம். நீங்கள் வணங்கப்போகும் ஆலயத்தின் வரலாறையும் தெரிந்து கொள்வது நல்லதுதானே! இந்த கதீட்ரல் தேவாலயம் தேசிய புனிதத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.அமைவிடம்: 24,சாந்தோம் நெடுஞ்சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. தொலைபேசி - 24985455
சின்னமலை தேவாலயம் - Temples in chennai
இமயமலைக்குப் பிறகு போகலாம். முதலில் இந்தச் சின்னமலைக்கு போக வேண்டும். இங்குதான் இயேசுவின் நேரடி சீடர்களில் ஒருவரான புனித தாமஸ் இறைப்பணி ஆற்றினார். இவரை கொலை செய்ய முயற்சி நடந்தது. இந்தக் குகையின் பின்புற வழியாக செயின்ட் தாமஸ் தப்பித்துவிட்டார். இவருடைய காலடித்தடம் குகையின் பின்புறத்தில் இருப்பதாகக் கருதப்படுகிறது. இங்கு புனித நீரூற்றும் ஒன்றுள்ளது. சென்ற நூற்றாண்டின் இறுதியில் வட்ட வடிவிலான தேவாலயம் சின்னமலையில் கட்டப்பட்டது.
அமைவிடம்:- சின்னமலை, சைதை பாலம் அருகில், சைதாப்பேட்டை, சென்னை - 600 018.
புனித ஜார்ஜ் கதீட்ரல் தேவாலயம் - Temples in chennai
மரங்களடர்ந்த சோலைக்குள் பெரும் சிலுவை நிற்பதுபோலக் காட்சிதரும் இந்தத் தேவாலயம் பழம் பெருமைமிக்கது. 1815 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்தத் தேவாலயத்திற்கு இறையியல் வகையில் மற்றொரு பெயரும் உண்டு. வரலாற்றுச் சிறப்புமிக்க தனித் தன்மைமிக்க மனிதர்களை இது நினைவூட்டுகிறது. திராவிட மொழி ஒப்பிலக்கணம் எழுதிய கால்டுவெல் இறையியலாளர்கள் ஹெபர் டாக்டர் கோரி சென்னைக்கு பட்டுத் தயாரிப்பை அறிமுகப்படுத்திய ஆண்டர்சன், வில்லியம் பாரி, ஜான் பின்னி போன்ற பெருமகன்களை நினைவுபடுத்துகிறது. இந்தத் தேவாலயத்தை ஒட்டியுள்ள கல்லறை வளாகத்தில் பழங்கால கிட்டிங் துப்பாக்கிகள், கூர்முனைக் கத்திகள் போன்றவை இடம் பெற்றுள்ளன. கி.பி. 1799 இல் ஆங்கிலேயர்கள் ஸ்ரீரங்கத்தை வெற்றிகொண்ட போது கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் இவை.
அமைவிடம்: 224, கதீட்ரல் சாலை, சென்னை - 600 086. தொலைபேசி - 28112740 - 28112741.
புனித மேரி தேவாலயம் - Temples in chennai
இந்தத் தேவாலயத்திற்கும் வரலாறு இருக்கிறது. இந்தியாவின் முதல் ஆங்கிலிகன் தேவாலயம் இது. சென்னை மாகாணத்தின் அப்போதைய ஆளுநராக இருந்தவர் எலிகு ஏலின். அவருக்கு இந்த தேவாலயத்தில்தான் திருமணம் நடந்துள்ளது. இவர்தான் யேல் பல்கலைக்கழகத்தை நிறுவியவர். புகழ்பெற்ற ஆங்கில தளபதி ராபர்ட் கிளைவ் திருமண முறைமையும் இங்குதான் நடந்துள்ளது. கி.பி. 1680 ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் இந்தியாவின் மிகப் பழமையான கல்லறைக் கல் இருக்கிறது. புனிதம் படர்ந்த இந்தத் தேவாலயத்தின் கதையைக் கேட்டால் மெய் சிலிர்க்கிறதல்லவா! இது புனித ஜார்ஜ் கோட்டைக்குள் இருக்கிறது.
அமைவிடம்: புனித ஜார்ஜ் கோட்டை வளாகம், இராஜாஜி சாலை, சென்னை - 600 009.
வேளாங்கன்னி தேவாலயம் - Temples in chennai
அலைகள் தாலாட்டும் எலியட்ஸ் கடற்கரையில் தெய்வீகக் காற்றை வீசுகிறது, அன்னை வேளாங்கன்னி தேவாலயம் நாகை மாவட்டத்தின் வேளாங்கன்னி ஆலயத்துடன் ஒப்பிட்டால் இது மிகச் சிறியதுதான். தன் அளவில்லா அருட் சக்தியால் மக்களை ஈர்க்கிறது. மெழுகுத் திரிகளில் ஒளிவீசும் சுடர்கள் அருள் வேண்டுவோரின் வாழ்வில் மகிழ்வை அள்ளித் தருகின்றன.
அமைவிடம்: பெசன்ட் நகர், சென்னை - 600 090. தொலைபேசி - 24911246.
மக்கா மசூதி - Temples in chennai
மெக்காவை ஞாபகப்படுத்தும் இரண்டு பக்கங்களிலும் நெடிதுயர்ந்த ஸ்தூபிகள் ஒரே இடத்தில் ஆயிரக்கணக்கானவர்கள்
தொழுகை செய்யக்கூடிய மக்கா மசூதி இஸ்லாமியர்களின் வணக்கத்துக்குரிய இடம் சென்னை மாநகரிலுள்ள முக்கியமான மசூதி இது.
தொழுகை செய்யக்கூடிய மக்கா மசூதி இஸ்லாமியர்களின் வணக்கத்துக்குரிய இடம் சென்னை மாநகரிலுள்ள முக்கியமான மசூதி இது.அமைவிடம்: பாபா அசரத் சையத் மூசா ஹத்தரி தர்கா, 822, அண்ணா சாலை, சென்னை - 600 002.
மாமூர் மசூதி - Temples in chennai
பழமையின் வேர்களில் எழுந்து நிற்கிற மசூதி. கடந்த 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டு 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கருங்கல் கட்டடமாக மாற்றப்பட்டது. சென்னை மண்ணடியில் வாழும் முஸ்லிம்களின் தொழுகை மசூதி. சுற்றுச்சுவரும் இரட்டைத் தூண் ஆதாரமும் சமீபத்திய கட்டடச் சிறப்பு. ஒரே சமயத்தில் 5000 பேர் தொழுகை செய்யக் கூடிய பரப்பளவை பெற்றது.
அமைவிடம்: அங்கப்ப நாயக்கன் தெரு, முத்தியால்பேட்டை, சென்னை - 600 001.
பெரிய மசூதி - Temples in chennai
டெல்லியில் ஜும்மா மசூதியைப் பார்த்தவர்களுக்கு நிச்சயம் இம்மசூதி ஆச்சரியம் தரும். அதைவிட இது பெரியதாகக் கருதப்படுகிறது. தற்போதைய ஆற்காடு இளவரசரின் பாட்டனார் நவாப் வாலாஜா முகமது அலி சிவப்புக் கல்லில் இந்த அற்புதமான மசூதியைக் கட்டினார். இது பார்க்க வேண்டிய இடம்.
அமைவிடம்: திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, திருவல்லிக்கேணி, சென்னை - 600 005.
ஆயிரம் விளக்கு மசூதி - Temples in chennai
பல் குவி மாடங்கள், இளம் தந்த றிறத்தில் சமீபத்தில் வரையப்பட்ட புனித திருக்குர்ஆன் வாசகங்களுடன் வெகு
நேர்த்தியாக கட்டப்பட்ட மசூதி இது. இஸ்லாமியர்கள் வணங்குதற்குரிய புனித தலம். இதற்கு மூலமான மசூதியை கி.பி. 1800 இல் நவாப் உம்டட்-உல்-உம்ரா அவர்கள் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்காக உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேர்த்தியாக கட்டப்பட்ட மசூதி இது. இஸ்லாமியர்கள் வணங்குதற்குரிய புனித தலம். இதற்கு மூலமான மசூதியை கி.பி. 1800 இல் நவாப் உம்டட்-உல்-உம்ரா அவர்கள் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்காக உருவாக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.அமைவிடம்: ஆயிரம் விளக்கு, சர்ச்பார்க் கான்வென்ட் எதிரில், சென்னை - 600 006. தொலைபேசி - 28518195.
புத்த விஹார் - Temples in chennai
புத்தம் சரணம் கச்சாமி, உருவ வழிபாட்டை எதிர்த்தவரையே இறை வடிவமாக்கிவிட்டார்கள். இந்திய ஆன்மிகச் செல்வங்களில் புத்தருக்கு முதன்மை இடம் உண்டு. புத்த மதம் உலகமெல்லாம் பரவிக் கிடக்கிறது. சென்னையில் உள்ள ஒரே ஒரு புத்த விஹார் இதுதான்.
அமைவிடம்: கென்னத் சந்து, எழும்பூர் இரயில் நிலையம் எதிரில், சென்னை - 600 008. தொலைபேசி - 28192458.
குருத்வாரா - Temples in chennai
சென்னைவாழ் சீக்கியர்களின் புனிதக் கோயில். சீக்கிய குருக்களின் தலைமைக் குரு குருகோவிந்த் சிங். இவர் கடவுளை அடைய இயற்கையான அமைதியான வழிகளை வழங்கினார். பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் சீக்கியர்களின் புனிதத்தலம். தமிழகம் வந்துவிட்ட சீக்கியர்கள் பொற்கோவிலை இங்கே தரிசித்துக் கொள்கிறார்கள்.
அமைவிடம்: ஜி.என். செட்டி சாலை, தி.நகர், சென்னை - 600 017. தொலைபேசி - 28268509.
அண்ணாசாலை தர்கா - Temples in chennai
இஸ்லாமியப் பெரியவர்கள் மறைந்த இடம் தர்காவாக வணங்கப்படுகிறது. அண்ணா சாலையில் இந்தத் தர்கா ஆராதனைக்குரிய
அடையாளம். சுமார் 450 வருடங்களுக்கு முன்னால் போய் வாருங்கள். அப்போது வாழ்ந்த இஸ்லாமியத் துறவி பாபா ஹஸ்ரத் சையத்மூசா. அவர் உலகச் சகோதரத்துவத்தைப் போதித்தார். இறுதியில் அவர் சமாதி அடைந்த இடத்தில்தான் இந்தத் தர்கா அனைத்து மதத்தினருக்கும் அருள் வழங்கி வருகிறது.
அடையாளம். சுமார் 450 வருடங்களுக்கு முன்னால் போய் வாருங்கள். அப்போது வாழ்ந்த இஸ்லாமியத் துறவி பாபா ஹஸ்ரத் சையத்மூசா. அவர் உலகச் சகோதரத்துவத்தைப் போதித்தார். இறுதியில் அவர் சமாதி அடைந்த இடத்தில்தான் இந்தத் தர்கா அனைத்து மதத்தினருக்கும் அருள் வழங்கி வருகிறது.அமைவிடம்: அண்ணாசாலை, தலைமை தபால் நிலையம் அருகில், சென்னை - 600 002.
ஹசரத் பாபா தர்கா - Temples in chennai
முந்நூறு ஆண்டுகள் பழமையானது இந்தத் தர்கா. இஸ்லாமிய ஞானியான ஹஸ்ரத் தஸ்தகீர் சாகிப் பாபா தனக்கு ஏற்படப் போகும் மரணத்தை முன்கூட்டியே அறிந்தவர். தனக்கு எந்த இமாமின் கீழும் ஜனாசா என்ற ஈமச்சடங்குப் பிரார்த்தனைகள் செய்யக்கூடாது என்று கட்டளையிட்டாராம். இப்படி அருளிய அவர் தன்னுடைய ஈமச்சடங்கு நடந்த பிறகு தானே தோன்றி பின் மறைந்தாராம்.
அமைவிடம் - 83 டாக்டர் நடேசன் சாலை,சென்னை - 600 005. தொலைபேசி - 28521077.
கத்ரி பாபா தர்கா - Temples in chennai
ஒரு பழமையான மரத்தின்கீழ் நிழலடியில் அமைந்துள்ள இந்தத் தர்கா அனைத்து மதத்தினராலும் வணங்கப்படுகிறது. இதை மக்கள் கத்ரி பாபா தர்கா என்று அழைக்கிறார்கள். சையத் பாபா கத்ரி சா கி.பி. 1793 ஹசரஸ்ப்பானி பாபா சா கத்ரி கி.பி. 1793 கல்வெட்டில் இப்படித் தான் எழுதப்பட்டுள்ளது.
அமைவிடம்: தமிழ்நாடு பாரத ஸ்கவுட்ஸ் வளாகம், வின்கோக் பார்க், திருவல்லிக்கேணி, சென்னை - 600 005. தொலைபேசி - 28512947
முகமது இஸ்மாயில் சாகிப் தர்கா - Temples in chennai
கண்ணியமிக்க காயிதெ மில்லத் என்று அனைவராலும் அன்பாக
அழைக்கப்பட்டவர் முகம்மது இஸ்மாயில் சாகிப். இவர் திருநெல்வேலி பேட்டையில் ஜுன் 5, 1896 ஆம் ஆண்டு பிறந்தார். சட்டமன்ற உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். சிறந்த பாராளுமன்றவாதி என்று பெயரெடுத்தவர். 1972 ஏப்ரல் 5 அன்று வானுலகை அடைந்தார். இந்த மக்கள் தலைவர்.
அழைக்கப்பட்டவர் முகம்மது இஸ்மாயில் சாகிப். இவர் திருநெல்வேலி பேட்டையில் ஜுன் 5, 1896 ஆம் ஆண்டு பிறந்தார். சட்டமன்ற உறுப்பினராகவும் பாராளுமன்ற உறுப்பினராகவும் இவர் ஆற்றிய பணிகள் ஏராளம். சிறந்த பாராளுமன்றவாதி என்று பெயரெடுத்தவர். 1972 ஏப்ரல் 5 அன்று வானுலகை அடைந்தார். இந்த மக்கள் தலைவர்.அமைவிடம்: திருவல்லிக்கேணி பெரிய மசூதி வளாகம், திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை - 600 005.
தமீம் அன்சாரி பாபா தர்கா - Temples in chennai
இதுவொரு சுவாரசியமான பின்னணி. உங்களை காலத்தின் பின்னுக்குத் தள்ளும் ஒரு புனிதரின் கதை. தமீம் அன்சாரி பாபா புனித மதினாவில் பிறந்தார். இறைவனடி சேர்ந்ததும் இவரது திருவுடல் ஒரு புனிதப் பேழையில் வைத்து கடலில் விடப்பட்டதாம். இந்தப்பேழை சென்னை கோவளம் கடற்கரையில் தங்கியிருக்கிறது. அந்தப் புனிதர் உடல் தங்கிய இடத்தில் தர்கா எழுந்தது. இங்கு மாதத்தில் பௌர்ணமிக்கு அடுத்து வரும் வியாழக்கிழமை, வழிபாட்டிற்கான புனித நாள். இந்த நாளை குறித்து வைத்துக் கொள்ளுங்கள்.
அமைவிடம்: கோவளம் கடற்கரை, நேரம்: காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை.
மோதி பாபா தர்கா - Temples in chennai
இந்த பாபாவுக்கும் ஒரு கதை இருக்கிறது. இவரது முழுப்பெயர் ஞானி காஜா குதுப் சையத் குலாம் தஸ்தகீர் மோதி பாபா.
மோதிபாபா ஒமனில் இருந்து நாகப்பட்டினம் வந்ததாகவும் பிறகு சென்னையில் வாழ்ந்து மறைந்ததாகவும் ஒரு பாடல் சொல்கிறது. இறைவனடி சேர்ந்த ஆண்டு 1959. இந்த மாமனிதர் மனித குல மேம்பாட்டுக்காக தன்னாலான அனைத்தையும் செய்த புனிதர்.
மோதிபாபா ஒமனில் இருந்து நாகப்பட்டினம் வந்ததாகவும் பிறகு சென்னையில் வாழ்ந்து மறைந்ததாகவும் ஒரு பாடல் சொல்கிறது. இறைவனடி சேர்ந்த ஆண்டு 1959. இந்த மாமனிதர் மனித குல மேம்பாட்டுக்காக தன்னாலான அனைத்தையும் செய்த புனிதர்.அமைவிடம்: 422, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை - 8.
மகான் சாந்திநாத் சமணக் கோயில் - Temples in chennai
மகாவீர் புத்தருக்கு இணையாகக் கருதப்படும் அகிம்சாவாதி சமணத்தைத் தோற்றுவித்த மகான் சமணர்கள் அல்லது ஜைனர்களின் தீர்க்கதரிசிகளை தீர்த்தங்கரர்கள் என்று சொல்வது மரபு. இந்த மரபில் வந்த 18 ஆவது தீர்த்தங்கரர்தான் மகான் சாந்திநாத். 24-வது தீர்த்தங்கரன் புனித மகாவீரர் ஆவார். சமண மதத்திற்கான புனிதக் கொள்கைகளையும் வகுத்து அருளினார். சமண மதத்தின் இலச்சினை ஸ்வஸ்திக்.
அமைவிடம்: ஜி.என். செட்டி சாலை, தி.நகர், சென்னை - 600 017. தொலைபேசி - 28151779.
ஜெயின் குரு மந்திர் - Temples in chennai
பளிங்குக் கற்களில் பளபளக்கும் கோயில்கள் ஜைனர்களுக்குச் சொந்தமானவை. சென்னையில் உள்ள ஜைனர்களின் கோயில்கள் பெரும்பாலும் பளிங்குக் கற்களால் கட்டப்படுபவை. இக்கோயிலின் கட்டடக் கலை பலரை ஈர்க்கும் உன்னதம்.
அமைவிடம்: லஸ் சர்ச் சாலை, மயிலாப்பூர், சென்னை - 4. தொலைபேசி - 24925574.
ஸ்ரீவிஜயசாந்தி ஸ்ரீசுவாமிஜி குரு மந்திர் - Temples in chennai
சிந்தாதிரிப்பேட்டையில் அமைந்துள்ள ஜைனர்களின் வழிபாட்டுத்தலம் மகாவீரரின் புனிதக் கொள்கைகளைப் பரப்புவதற்காகவும்
இத்திருக்கோயிலை கட்டியுள்ளார்கள். வெண்மை நிறத்தில் உள்ளங்கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இத்திருக்கோயிலை கட்டியுள்ளார்கள். வெண்மை நிறத்தில் உள்ளங்கவரும் விதத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது.அமைவிடம்: 68, அருணாசலம் தெரு, சிந்தாதிரிப்பேட்டை, கூவம் பாலம் அருகில், சென்னை - 600 002. தொலைபேசி - 28551032.
ஸ்ரீஜெயின் பிரார்த்தனா மந்திர் - Temples in chennai
சென்னையில் ஒரு மவுண்ட் அபு. ராஜஸ்தான் மவுண்ட் அபுவில் உள்ள ஜைனக் கோயிலைப் போலவே கட்டடக் கலை நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட கலைக்கோயில் தென்னிந்தியாவின் தலைசிறந்த பளிங்குக் கலைக் கோயில் என்ற புகழுக்குரியது. இதற்கு கதேம்பரர் கோயில் என்ற மற்றொரு பெயம் உண்டு. அற்புத வேலைப்பாடுகளுடன் இரண்டு அடுக்குகள் கொண்டது இது. இக்கோயில் 1994 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இங்கு 23 ஆம் தீர்த்தங்கரர் மகான் பாஸ்கி நாதரின் குவார்ட்ஸ் வகை கல்லில் செதுக்கப்பட்ட சிலை அற்புதம். வைரங்களை வெட்டும் சிறப்புக் கருவிகளைக் கொண்டு இச்சிலை வடிக்கப்பட்டுள்ளது. இச்சிலை உள்ள பிரார்த்தனை மண்டபம் கண்ணாடி வேலைப்பாடுகளால் ஆனது. இது தென்னிந்தியாவில் அரிதான கலை நுட்பம்.
அமைவிடம் - 96 வேப்பேரி நெடுஞ்சாலை, சென்னை - 7. நேரம்: சாதாரண நாட்கள் காலை 10-12.30 மணி முதல் மாலை 5-9 மணி வரை. விடுமுறை நாட்களில் காலை 8.30-12.30 மணி முதல் மாலை 5-10. புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை.



முருகக் கடவுளைப்போல உலகமெல்லாம் சுற்றிவர வேண்டியதில்லை. நகரைப் பார்க்க தெருவெங்கும் சுற்றத் தேவையில்லை. அண்ணாநகர் கோபுரம் பூங்காவிற்குப் போய் வந்தால் போதும். இங்குள்ள கோபுரம்தான் நகரிலேயே உயரமும், பெரியதும் ஆகும். சுருள் வடிவில் அமைந்த படிக்கட்டுகளில் நடந்து செல்வதே ஒரு சுகானுபவம். அதன் உச்சியில் நின்று முழு நகரத்தின் அழகையும் பார்க்கலாம். இதுவொரு நிற்கும் விமானமாக நகரைச் சுற்றிக்காட்டும் அதிசயம். ஒத்தை ரூபாயில் ஊரைப் பார்க்கும் ஆனந்த அனுபவம்.
ஓர் அடையாளம் அமீர் மகால். ஆற்காடு நவாப்களின் கலைத் திறனின் சாட்சியாக 14 ஏக்கர் பரப்பளவில் இந்த மாளிகை கம்பீரம் ஒளிர அமைக்கப்பட்டிருக்கிறது.
முந்தைய கட்டடங்களில் குட்டி நகராகத் தோன்றும் பகுதியில் அமைந்திருக்கும் தேசிய நூலகங்களில் ஒன்று. மிகப்பழமையான கட்டடத்தில் இயங்கும் நூலகம். நவீன வசதிகள் கொண்டது. தொடுதிரைக் கணினி நிறுவப்பட்டிருக்கிறது. இங்கு மிகப் பழமையான நூல்கள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளன. வாசிப்பை ஒரு சுவாரசியமான அனுபவமாக மாற்றக்கூடிய சூழல் அமையப் பெற்ற மிகப்பெரும் நூலகம். சென்னையின் பெருமைமிகு இடங்களில் இதுவும் ஒன்று.
மனத்தில் ஆழ்கடல் அமைதியை உருவாக்கும். அருகருகே வேளாங்கண்ணி தேவாலயமும் அஷ்டலட்சுமி கோயிலும் எனக் கடலருகே சமரச சன்மார்க்கம். அலையடிக்கும் எலியட்ஸ் கடற்கரையில் ஆன்மிக காற்றும் வீசுகிறது. கொஞ்சம் காற்றை வாங்கிக் கொண்டே கொஞ்சும் கடலை ரசித்து வரலாம். இளமைக்கு ஏற்ற கடற்கரை இது. அமைதி விரும்பிகளுக்குத் திறந்தவெளி தியான மண்டபம். சென்னையின் தெற்குப் பகுதியில் பெசன்ட் நகரில் அமைந்துள்ளது.
ஆங்கிலேய ஆட்சியின் பழம்பெரும் நினைவுச் சின்னம். நாற்புறமும் அகழியுடன் அரைவட்ட வடிவில் இந்தக் கோட்டையை ஆங்கிலேயர்கள் வடிவமைத்துள்ளார்கள். அகழிகளின் பாதைகளும் கோட்டைச் சுவர்களும் அழியாத காலத்தின் சுவடுகள். மாநில சட்டமன்றப் பேரவை தலைமைச் செயலகம் ராணுவம் மற்றும் தொல்லியல் துறை அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இங்கு ஓர் அருங்காட்சியகமும் உண்டு. இராபர்ட் கிளைவுக்குத் திருமணம் நடந்ததாகக் கருதப்படும் ஒரு தேவாலயமும் இருக்கிறது. ஐரோப்பிய பாணியிலான பழம்பெரும் ஓவியங்கள் இங்குள்ளன.
மாபெரும் அடையாளம். உயர்நீதிகள் பிறக்கும் இடமான இது. இந்தியாவின் இரண்டாவது பெரிய நீதிமன்ற வளாகம். 1892-ம் ஆண்டு இந்திய-இஸ்லாமிய பாணியில் கட்டப்பட்டது. பாரிமுனைக்கு அருகிலுள்ள இந்த வளாகத்தில்தான் சட்டக் கல்லூரியும் அமைந்துள்ளது. நீதிமன்ற கட்டடத்தின் சின்னச் சின்ன படிக்கட்டுகளிலும் கூட மரபார்ந்த கட்டடக்கலையின் மகத்துவங்களைப் புரிந்து கொள்ளலாம். வழக்குகள் இல்லாமலும் இந்த வளாகத்திற்குள் போய் வரலாம்.
இந்தியக் கல்வித்துறையில் முதன்மையான இடம் இதற்குண்டு. லண்டன் பல்கலைக்கழகத்தை முன் மாதிரியாகக் கொண்டு கட்டப்பட்ட இப்பல்கலைக்கழகம் 1857-ஆம் ஆண்டு இந்திய சட்டவியல் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டது. சட்டம், மருத்துவம், அறிவியல், கலை என பல்துறைகளின் ஞானபீடமாக விளங்குகிறது. இதனுள்ளே உயர்கல்வியின் சல்லிவேர்கள் ஊடாடிக் கிடக்கின்றன. பலர் படித்த இடம். படிக்கும் இடம். நாம் பார்க்க வேண்டிய இடம்.
கலைக்காகவே வாழ்ந்து மறைந்த ருக்மணி தேவி அருண்டேல் அவர்களால் 1936-இல் தொடங்கப்பட்டது கலாசேத்ரா. பரதம் மற்றும் பிற நாட்டியங்களை தினம் கலைஞர்களுக்குக் கற்றுத் தருவதோடு அதை மீளுருவாக்கம் செய்யும் உயரிய நோக்குடன் திருமதி.ருக்மணி தேவி தொடங்கியிருக்கிறார். சுரங்க வகை கலைகளுக்கும் இங்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மர நிழல்களின் கீழே திறந்த வெளியில் பழங்கால குருகுல முறையில் பல்கலைகளும் கற்பிக்கப்படுகிறது இதன் சிறப்பு. அதோ இசையின் அதிர்வுகள் காதில் விழுகின்றன.
இந்த நிற்கும் நெடுமரம். இங்கிருந்து இரவில் சுழலும் ஒளிவிளக்கு வானத்து நிலவுக்குக்கூட வழி காட்டும். கடற்கரை வாசிகளுக்கு இது அழகின் அடையாளம். வழி தவறும் கட்டுமரங்களுக்கு இது ஒரு வழிகாட்டும் ஒளி மரம்.
கலகலக்கும். 1968-ல் நடந்த இரண்டாம் உலகத் தமிழ் மாநாட்டின்போது வைக்கப்பட்ட தமிழறிஞர்கள், விடுதலை வீரர்கள் மற்றும் காவிய மாந்தர்களின் அழகிய வேலைப்பாடுமிக்க சிலைகள் கடற்கரையை அலங்கரிக்கின்றன. மெரினாவின் அடையாளம் உழைப்பாளர் சிலைத் தொகுப்பு. கூட்டுழைப்பு, ஊக்கம் உடலுழைப்பின் மேன்மையை எடுத்துக்காட்டுகிறது. சென்னை மாநகராட்சியின் தீவிர கவனத்தில் மெரினாவின் அழகு கூடிக்கொண்டேபோகிறது. அலைகள் உரசும் கரையில் நின்றபடி கடலை பார்த்துக்கொண்டே இருக்கலாமே? காசா பணமா!
முதல் உலகப் போரில் நேச நாடுகள் அடைந்த வெற்றியையும் பின்னர் இரண்டாம் உலகப் போரில் உயிர்த் துறந்த சென்னை ராஜதானியைச் சேர்ந்தவர்களின் நினைவாகவும் கட்டப்பட்டுள்ளது. வரும் தலைமுறைகளுக்காக காலத்தால் வரலாறு கரைந்து போகாமல் இருப்பதற்காகக் கல்லில் செதுக்கப்பட்டிருக்கிறது. உங்களின் வருகையும் கூட ஒரு வரலாறுதான். சென்று பாருங்கள்.
ஆளுநர் நேப்பியர் அவர்களால் 1869 ஆம் ஆண்டு இப்பாலம் கட்டப்பட்டது. முதலில் இது இரும்பு கிராதிகளால் ஆன ஒடுக்கமான பாலமாகத்தான் இருந்தது. பின்னர் 1943 ஆம் ஆண்டு ஆர்தர் ஹோப் அவர்களால் கான்கிரிட்டால் அகலப்படுத்தப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டது. ஆங்கிலேயரின் பொறியியல் ஆற்றலுக்குக் காலத்தால் அழியாத சான்றாக இப்பாலம் இருக்கிறது. அதேபோன்று இன்னொரு பாலமும் அதன் அருகில் தமிழக அரசால் கட்டப்பட்டுள்ளது.
அட்டவணைகள் ஆகியன இந்திய ரயில்வே துறையின் வளர்ச்சியையும் மேம்பாட்டையும் எடுத்துக் காட்டுகின்றன. இளையவர் முதல் முதியவர் வரை இந்தக் காட்சிச் சாலை உற்சாகப்படுத்தி ஆர்வம் தரக்கூடியது. குழந்தைகள் பார்த்து ரசித்த ஒரு சில பொம்மை ரயில்கள் மட்டுமல்ல 50 ஆண்டுகளுக்கு முந்தைய பழைய ரயில் பெட்டிகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
போன்ற பிரமாண்ட தோற்றம் கொண்டது. இந்திய தன்னாட்சியின் தந்தை என்று போற்றப்படுகிற ரிப்பன் பிரபுவின் பெயரால் அழைக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி மன்றமும் அதன் ஆட்சிக் குழுவும் இம்மாளிகையில் இயங்குகின்றன.
இதன் நோக்கம் மதம் மற்றும் தத்துவம் சார்ந்த ஆய்வுகளுக்கானது. 1892 இல் அடையாறில் மரங்களடர்ந்த இயற்கைச் சூழல் அமைந்த இடத்துக்கு இச்சபை மாற்றப்பட்டது. பல நூற்றாண்டுகளைக் கடந்தும் பசுமை மாறாது உயிர்ப்புடன் இருக்கும் இந்த ஆல விருட்சத்தின் கிளைகளும் விழுதுகளும் 40,000 சதுர அடி பரப்பளவில் பரவியுள்ளன. இங்குள்ள நூலகம் பழம் பெருமைமிக்கது. பல அரிய நூல்கள் பாதுகாப்பில் உள்ளன. ஞானம் தேடும் மனிதர்களுக்கு இது ஓர் இயற்கையின் போதி மரம். இங்கு இளைப்பாறுவோர் எல்லாம் தத்துவ ஞானம் பெறுவார்கள்.
இதற்கு முன்பு எங்குமே பார்க்கக் கிடைக்காத கலைப்பொருட்களின் சங்கமம் இது. சமகாலப் பொருட்கள் முதல் வரலாற்றுக்கு முந்தைய கண்டு பிடிப்புகள் - கற்சிலைகள், வெண்கலச் சிலைகள், உயிரியில், இனவியல், புவியியல் சார்ந்த சான்றுகள் இங்கு இடம்பெற்றுள்ளன. ஆயிரம் நூல்களின் அறிவை இந்த அருங்காட்சியகம் ஒருமுறையில் உங்களுக்கு கற்றுத்தந்து விடும். உலகப் புகழ்ப்பெற்ற அமராவதி மென்கல் புடைப்புச் சிற்பங்கள் இங்குதான் உள்ளன. இந்தச் சிற்பத் தொகுப்பில் புத்த ஜாதகக் கதைகளின் முக்கியக் கட்டங்கள் சித்திரக் கதை பாணியில் செதுக்கப்பட்டுள்ளன. லண்டன் அருங்காட்சியகத்தில் இதன் மற்றொரு பகுதி உள்ளது.
புதைந்திருக்கிறது. ஒரு காலத்தில் கோட்டையில் பணியாற்றும் அதிகாரிகளின் அலுவலகமாக இருந்தது. பிறகு அது ஒரு வங்கியாக மாறியது. இதுவே மெட்ராஸ் பேங்கின் முன்னோடி வங்கி. பின்னர் பம்பாய் மற்றும் பெங்கால் வங்கியுடன் இணைந்து இம்பீரியல் பேங்க் என்ற பெயர் சூடிக் கொண்டது. இப்போது அதன் பெயர் ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா இதன் மாடியில் உள்ள நீண்ட அறை பொது மக்களுக்கான பட்டுவாடா அறையாக இருந்திருக்கிறது. பிறகு கி.பி. 1799 இல் மேற்கூரையில் கலங்கரை விளக்கம் அமைக்கப்பட்டது. இதுதான் சென்னையின் முதல் கலங்கரை விளக்கம். இவ்வாறான வளர்சிதை மாற்றங்களின் இறுதியாக, 1948 இல் அருங்காட்சியமாக அது தன்னை மாற்றிக் கொண்டது.
மணற்கல்லால் கட்டப்பட்டது. தங்கக் கலசத்தினுள்ளே வெள்ளிப் புதையல்களா? இக்கட்டடமே ஒரு கலைப் புதையல்தான். 16 மற்றும் 18 ஆம் நூற்றாண்டுக் கால மொகலாய ஓவியங்கள், வெண்கலக் கலைப்பொருட்கள் மற்றும் 10 - 13 ஆம் நூற்றாண்டுகளின் கைவினைப் பொருட்களும் இங்குள்ளன. இக்கலைக் கூடத்தில் உள்ள பிரம்மா சிலை எல்லோரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒன்று.
தமிழ்நாடு சுற்றுலாத் துறை மற்றும் சுற்றுலா வளர்ச்சிக் கழகத் தலைமை அலுவலகமும் பல்வேறு மாநில அரசுகளின் சுற்றுலாத் துறை அலுவலகங்களும் இங்குள்ளன. சுற்றுலாத் தலங்கள் பற்றிய தேவையான தகவல்கள் மட்டுமல்ல பயண ஏற்பாடுகள் பற்றிய விவரங்களையும் கூட எளிதில் பெற்றுச் செல்லலாம்.
அலுவலகங்கள் இங்கு மையம் கொண்டுள்ளன. மிக விரிந்த பரப்பில் உருவாகியுள்ள டைடல் பூங்கா நவீன கட்டடக் கலை அழகின் அடையாளம். குட்டி நகரம் போல டேபிள் டென்னிஸ், பில்லியர்ட்ஸ், டென்னிஸ் என பல விளையாட்டு வசதிகளும் உள்ளன. கனரா வங்கி, ஹிக்கின்பாதம்ஸ், புத்தக நிலையம், உணவகம் என உள்ளுக்குள்ளேயே ஓர் உலகம். இந்தப் பூங்காவில் மலர்கள் மலர்வதில்லை. இங்கு மென் பொருட்களே விளைபொருட்கள்.
ஐஸ் கம்பெனியால் கட்டப்பட்டது. 1874 ஆம் ஆண்டு வரை வர்த்தகம் நடந்த இந்த மாளிகையை பிலிகிரி அய்யங்கார் விலைக்கு வாங்கி கேஸ்டில் கெர்னான் என்று பெயரிட்டார். தனது புகழ்பெற்ற சிகாகோ உரையை நிகழ்த்திவிட்டு கொல்கத்தா திரும்புவதற்கு முன் சென்னையில் பிப்ரவரி 6 முதல் 15 வரை இங்கு தங்கிச் சென்றார். இந்த மாளிகை 1930 ஆம் ஆண்டு அரசின் பொறுப்புக்கு வந்தது. 1963 ஆம் ஆண்டு விவேகானந்தர் நூற்றாண்டை முன்னிட்டு அவரது பெயரை மாளிகைக்குச் சூட்டி மகிழ்ந்தது தமிழக அரசு. பிறகு டிசம்பர் 20, 1999 ஆம் ஆண்டு சீரமைக்கப்பட்டு அப்போதைய தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களால் விவேகானந்தர் சிலை இங்கு நிறுவப்பட்டது. இந்த நினைவாலயத்தில் 3 ஆவது தளத்தில் சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்ட அமைதி குடியிருக்கும் ஒரு தியான மண்டபம் உள்ளது. நினைவு இல்லத்தைப் பார்க்க வருபவர்கள் தியானம் செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது.
கட்டடக் கலையின் அற்புதம் வள்ளுவர் கோட்டம். கருங்கல்லில் செதுக்கப்பட்டுள்ள தேர், திராவிட கட்டுமானக் கலையின் சிறப்பை எடுத்துக்காட்டுகிறது. வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே 4000 பேர் அமரும் அரங்கு உள்ளது. 1330 குறட்பாக்களும் கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டுள்ளன. 133 ஓவியர்கள் வள்ளுவம் குறித்து தீட்டிய ஓவியங்களும் இங்கு பார்வைக்காக அரங்கின் மேல் மாடத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதயங்களின் எண்ணிக்கை கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றது. தமிழக அரசியல் வரலாற்றில் அண்ணா என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட தலைவர். அவருடைய முழுப்பெயர் சி.என்.அண்ணாதுரை. இவரது ஆட்சிக் காலத்தில்தான் சட்டபூர்வமாக தமிழ்நாடு எனப்பெயரிடப்பட்டது. எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என்றுரைத்த அண்ணா 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி 3 இல் மறைந்தார். எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் தீபமும், அவரது உரைவீச்சும் மறக்க முடியாதவை.
செய்த புதுமைகள் இன்றும் அவரை நினைவில் வைத்திருக்கின்றன. திருநெல்வேலி மாவட்டம் எட்டையபுரத்தில் பிறந்த பாரதி மிகக் குறைந்த வயதிற்குள் கவிதைகள் காவியங்கள் என எழுதிக் குவித்தவர். துயர்மிகு வாழ்விலும் இவரால் எழுதப்பட்ட கவிதைகளில் கவித்துவம் நுங்கும் நுரையுமாகப் பொங்கி வழிகிறது. 'வேடிக்கை மனிதரைப் போல் எனை நினைத்தாயோ! என்று கோபக்குரலில் கேட்ட பாரதியார், திருவல்லிக்கேணியில் வாழ்ந்த இல்லம் நினைவில்லமாகப் போற்றப்படுகிறது. இங்கு பாரதியார் காலத்தின் புகைப்படங்கள் கையெழுத்துப் பிரதிகள் நண்பர்களின் புகைப்படங்கள் ஆகியவை இடம் பெற்றுள்ளன. இந்த நினைவு இல்லத்தில் உள்ள அரங்கு பொது நிகழ்ச்சிகளுக்கும் வழங்கப்படுகிறது.
அமைக்கப்பட்டிருக்கிறது இந்த மண்டபம். கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்றை நடத்திய காந்தியடிகளின் 'தமிழ்க் கையெழுத்து'ப் பிரதி இங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. 'வாழ்க நீ எம்மான் இந்த வையத்து நாட்டியெல்லாம்' என்று காந்தியைப் பாடினார் மகாகவி பாரதி. அகிம்சைக்கு முதலும் கடைசியுமாக காந்திதான் ஞாபகத்திற்கு வருகிறார்.
பயன்படுத்தாத கர்மவீரர். இவர் முதலமைச்சராகப் பணியாற்றிய 9 ஆண்டுகள் தமிழகத்தின் பொற்காலம் எனப் போற்றப்படுகிறது. படிக்காத மேதை எனப் பலராலும் பாராட்டப்பட்ட காமராஜர் அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவராக நீண்ட காலம் பணியாற்றியவர். இலவசக் கல்வி, மதிய உணவு, கிராமங்களுக்கு மின்வசதி என இவர் காலத்தில் தமிழகம் தலைநிமிரத் தொடங்கியிருந்தது. தமிழகக் குழந்தைகளின் கல்விக் கண் திறந்த காமராஜரின் நினைவு மண்டபம் கிண்டியில் அமைந்துள்ளது. இனிவரும் எல்லா தலைமுறைக்கும் அவரது எளிமை நினைவில் இருக்கும்.
நினைவிடம் மேற்கத்திய பாணியிலான கட்டடக் கலை நுட்பத்துடன் உருவாக்கப்பட்டது. இதன் நவீன தோற்றம் பார்வையாளர்களை தினம் வசீகரித்துக் கொண்டிருக்கிறது. அறிஞர் அண்ணா துயிலும் நினைவிடத்திற்கு அருகிலேயே இது அமைந்துள்ளது. அவர் 24 டிசம்பர் 1987 அன்று மறைந்தார்.
அதிகாரத்தையும் புறக்கணித்து, தமிழன் தன்மானம் பெறுவதற்காகக் கடைசிவரை சமூகப் போராளியாகவே வாழ்ந்த பெரியார் 24.12.1973 அன்று இயற்கை எய்தினார். இவரது நினைவிடம் பெரியார் திடலில் இயற்கை எழில் கொஞ்சும் சூழலில் அமைந்துள்ளது. இங்குள்ள எம்.ஆர்.ராதா மன்றம் பொது நிகழ்ச்சிகளுக்கு அளிக்கப்படுகிறது.
பள்ளிப் பாடங்களில் நேரில் பார்த்து அறிவதைப் படம் பார்த்து அறிந்து கொள்கிறார்கள். மரங்களில், புல்வெளிகளில், நீர் நிலையில் வாழும் கழுகுகள், புறா, வாத்து, பலவண்ணக் கிளிகள், வான் கோழிகள் என பறவையினங்களை இங்கு பார்க்கும் வாய்ப்பு குழந்தைகளுக்கு கொண்டாட்டம். காட்டுச் சூழலில் இன அழிவின் விளிம்பில் உள்ள புள்ளிமான், வெண்மான், புனுகுப் பூனை மற்றும் மீன் கொத்தி, குயில் போன்ற பறவையினங்கள் இங்கு பாதுகாப்பாக வளர்க்கப்படுகின்றன.
இந்தியா குடியரசாக மலர்ந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் விதமாக அமைக்கப்பட்டது இந்தப் பொன்விழா நினைவுத்தூண். இது 2001 ஜனவரி 25-ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது.
இந்த இயக்கம் கண்டு ஐம்பது ஆண்டுகள் நிறைவடைந்ததைக் கொண்டாடும் நினைவுச் சின்னம். இது 02.10.1993 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்தப் பொறுப்புக்கு வந்த முதல் இந்தியர் இவரே. அவரது காலத்தில் இந்தக் கல்லூரி தேசிய அளவில் புகழ்பெற்றது. சென்னையின் அடையாளமாக மாறிப் போய்விட்ட உழைப்பாளர் சிலையும் காந்தி சிலையும் ராய்சௌத்ரியின் கலை வண்ணத்தில் உருவானவை. சந்தானாராஜ், முனுசாமி, தனபால், அல்போன்சா, ஆதிமுலம், ஆர்.பி.பாஸ்கரன், தெட்சிணாமுர்த்தி, சந்ரு போன்ற தமிழகத்தின் பிரபல கலைஞர்கள் இக்கல்லூரியில் பயின்றவர்களே. இங்குதான் இந்தியாவிலேயே முதன் முதலாக புகைப்படக் கலை வகுப்பு தொடங்கப்பட்டது.